என் அன்னையை வாழ்த்துகிறேன்...!

அன்பென்னும் மூன்றெழுத்தால்
அன்னை என்ற பெயர் பெற்று
உறவென்னும் மூன்றெழுத்தால்
அறிவென்னும் இன்பம் தந்து 
கல்வியெனும் மூன்றெழுத்தால்
உலகாழும் நிலை தந்து 
திறமை என்னும் வழிகாட்டி 
பணமென்னும் மூன்றெழுத்தால்  
பெருமை அடையச் செய்து 

நல்ல குணம் என்னும் மூன்றெழுத்தால்
நலம் தந்த அன்னையை - நான் 
கவிதை என்னும் மூன்றெழுத்தால்
இன்பமாக வாழ்த்துகிறேன்.

Categories: Share