என் அன்னையை வாழ்த்துகிறேன்...!
அன்பென்னும் மூன்றெழுத்தால்
உறவென்னும் மூன்றெழுத்தால்
கல்வியெனும் மூன்றெழுத்தால்
உலகாழும் நிலை தந்து
திறமை என்னும் வழிகாட்டி
பணமென்னும் மூன்றெழுத்தால்
பெருமை அடையச் செய்து
நல்ல குணம் என்னும் மூன்றெழுத்தால்
நலம் தந்த அன்னையை - நான்
கவிதை என்னும் மூன்றெழுத்தால்
இன்பமாக வாழ்த்துகிறேன்.