ஒரு சொல் போதும் பெண்ணே!
நான் உறங்கினாலும் என்
இதயம் உறங்கவில்லை
என் உள்ளத்தில் நீ உறைந்து என்
உறக்கத்தை ஏன் கலைக்கின்றாய்
பெண்ணே நீ என்னை
காதலிக்கிறாய் என்று
ஒரு வார்த்தை
சொல் பெண்ணே
அந்த ஒரு சொல்லோடு - நான்
இந்த பூமியில் உயிர் வாழ்வேன்
அந்த ஒரு சொல்
போதும் பெண்ணே..