கடவுள்!


.........................
ஒளியை விழுங்கிய இருட்டு,
உயிர் தந்த முகிலை
மறைத்து கொட்டும் கொடு மழை,
பாறைகளை புரட்டிவிட்டு
கை காட்டி அகன்ற அலை,

பிணம் உண்ட செருக்கில்
உறுமி படுத்துள்ள கடல்,
மரங்களை- புற்களின் அடியில்
மண்டியிட வைத்த காற்று,
மலைகளை புரட்டுவதாய்
மிரட்டி பாயும் நதி,
இத்தனைக்கு பின்னும்..
எதுவும் நடக்காததாய் சிரிக்கும்
இவள்- கடவுள்!

Categories: , Share

Leave a Reply