காலமே உன் உயிர்..
நண்பா!
இருக்கும் காலங்களை
இருட்டில் தொலைக்காதே..!
தொலைத்தால் மீண்டும்
”இழந்தகாலம்” கிடைக்குமா..?
கிடைத்தால் ”இறந்தகாலம்”
மீண்டும் நடக்குமா..!?
அனைத்தையும் தெரிந்துகொள்.!
மனிதர்களை புரிந்துகொள்.!
உலகத்தினை அறிந்துகொள்.!
நீ எடுத்த வைக்கும்
ஒவ்வொரு அடியும்
சாதனைகளுக்கு
அடித்தளமாகட்டும்..!
சாதனைகளுடன்....
உன் வாழ்க்கைப்பயணம்
தொடரட்டும்.......!