நேசித்த முதல் பெண்!
தாயின்கருவில் வந்தது
என் உயிர்
தாயின் அரவணைப்பில் வந்தது
இந்த உலகம்
தாயின் பாசத்தில் வந்தது
மொழி
தாயின் வளர்ப்பில் வந்தது
நற்பழக்கம்
தாயின் சொல்லில் வந்தது
வாழ்க்கை
இது எல்லாம் வந்தது
அன்னை எனும் மூன்றெழுத்தில்
என்னை நேசித்த
முதல் பெண்ணும்
நான் நேசித்த
முதல் பெண்ணும்
என் அன்னையே..