சுயகொள்ளி!


வாழும்போதே – வாயில்
சுய கொள்ளி வைக்கும்
சூரர்களே|!
உங்கள் சுவாசத்திற்கு
காபனுடன்
ஏன்
கட்டாய திருமணம்?

நிசப்தமாய் இயங்கும்
நுரையீரல்களை
நிக்கொட்டின் கொண்டு
நிரப்புவது நியாயமா?

உயிர்மூச்சின் பயணத்திற்கு
உதவுகின்ற மூக்கை
புகைபோக்கியாக்கும்
உரிமை – உனக்கு
எங்கிருந்து கிடைத்தது?

புன்னகை பூக்கும் வாய்கள்
நெருப்பைப் பூப்பதில்
அப்படியென்ன ஆடம்பரமிருக்கிறது?

புகைக்கையில் - நீ
உள்விடுவது புகையல்ல!
தவணை முறையில் மரணத்திற்கு
விடும் அழைப்பு!
ஒவ்வொரு புகைத்தலிலும்
வாழ்வில் ஐந்து செக்கன்
தொலைகிறதென்பது
அறிவியல் அறிவித்த நிஜம்

புகைத்தல் என்பது…
கவலையைக் கலைக்கும்
ஏற்பாடல்ல!
அது…
சுகமாகப் புரியும்
தற்கொலை!
புற்று நோய்க்கும்
கசத்திற்கும்
பூரிப்புடன் விடுக்கும்
ஆழைப்பு!
மொத்தமாகக் கூறின்
உன் சுற்றத்திற்கு
சொல்லாமல் கொடுக்கும்
தண்டனை!

இன்னும்…
உன் தற்கொலையை
தவணை முறையில்
நிகழ்த்த விரும்பின் - நீ
தாராளமாகப் புகை
வசந்தத்தை அனுபவிக்க
உருவான உடம்பில்
விஷம் தடவ விரும்பும்
உனக்கு
எதைச் சொல்லி இனியென்ன

Categories: , Share

Leave a Reply